தஞ்சையில் திடீரென்று ஒன்று கூடிய தீயணைப்பு துறையினர்..! என்னாச்சி தேசிய தொப்புள் கொடி ..?
ஜனவரி 26 ஆம் தேதி 2026ஆம் ஆண்டு77 வது குடியரசு தின விழா நிகழ்ச்சி தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக
77 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூர் தீயணைப்பு நிலையம் அரண்மனை வளாகத்தில் மாவட்ட அலுவலர் திரு.ச.குமார் அவர்கள் இந்தியாவின்தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.
குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பணியாளர்களுக்குஅனைவருக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இன்று பிரம்மாண்டமாக இந்தியா முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சை தீயணைப்பு துறையினர் ஒன்று கூடியதால் அங்கே பரபரப்புடன் காணப்பட்டது. பிறகுதான் தெரிந்தது இவர்களும் தஞ்சையே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக சிறப்பான முறையில் தேசிய கொடியையேற்றி குடியரசு தினத்தை கொண்டாடினர் என்று..!
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ச. குமார் மாவட்ட அலுவலர் பதவியில் சிறப்பாக பணிபுரிந்து தற்பொழுது துணை இயக்குனர் பதவி உயர்வில் மதுரை மாவட்டத்திற்கு செல்லும் மாவட்ட அலுவலர் அவர்களுக்கு பணியாளர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரியாவிடை கொடுத்தனர்.
தேசிய கொடியும் அவருக்கு வாழ்த்துக்களோடு தன் மூவண்ணத்தால் அசைந்து அனுப்பியது போல் இருந்த சம்பவம் அங்கே ஒரு உருக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
இதனால் சில தீயணைப்பு துறை அதிகாரிகள் தங்களின் நட்பு உறவு அதிகாரியை பிரிந்ததால் மகிழ்ச்சியான தருணமும் உருக்கமான நிகழ்வும் ஏற்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0