திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமை ஞாபகம் இருக்கா? கும்பகோணத்தில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் கேள்வி..?
கும்பகோணத்தில் திமுக வேட்பாளர் அன்பழகன் புயல் பிரச்சாரம் – மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கும் திமுக
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் தனது தீவிர வாக்கு சேகரிப்பால் மக்கள் மத்தியில் தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் பேசியதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் குற்றவாளியாக இருந்தவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு எதிராக இவர் என்ன கருத்தை கூறினார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு துணை நின்றார் என்பது மக்களுக்கு தெரியும் திமுக கட்சியை பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பு உள்ளார் கும்பகோணம் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் மேலும்
இரண்டாவது நாளாக நடைபெற்ற அவரது பிரச்சாரம், சாதாரண அரசியல் நிகழ்வாக அல்லாமல், மக்கள் இயக்கமாகவே மாறியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சியின் வார்டு எண் 1, 2, 3, 4 பகுதிகளான மேலக்காவேரி புதுப்பாலம் பகுதியில் தொடங்கிய இந்த பயணம், மூப்ப கோவில் வழியாக மேல கொட்டையூர் வரை பரவியது. காலைப் பொழுதிலேயே தொடங்கிய இந்த பிரச்சாரம், ஒவ்வொரு தெருவிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இருசக்கர வாகன பேரணியாக ஆதரவாளர்களுடன் தெருக்களில் சென்று, வீடு தோறும் மக்களை நேரில் சந்தித்து பேசும் அன்பழகனின் அணுகுமுறை, அவரை மக்கள் மனதில் நெருக்கமாக கொண்டு செல்கிறது. அரசியல் பேச்சுகளுக்கு அப்பால், மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை கேட்டு அறிந்து, தீர்வு காணும் உறுதியை வெளிப்படுத்திய அவரது நடைமுறை அரசியல், பலரிடமும் நல்ல எதிரொலியை ஏற்படுத்தியது.இந்தப் பிரச்சாரத்தின் சிறப்பம்சம், மக்களின் தன்னார்வ பங்கேற்பே. வழி முழுவதும் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வரவேற்று, ஆதரவை வெளிப்படுத்தினர். இது ஒரு வேட்பாளருக்கான ஆதரவு மட்டுமல்ல; மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.மேலும், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு, இந்த பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். ஒற்றுமையும் ஒழுங்கும் கலந்த இந்த அணியின் செயல்பாடு, தேர்தல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.மொத்தத்தில், அன்பழகனின் இந்த தீவிர வாக்கு சேகரிப்பு, கும்பகோணம் தொகுதியில் அரசியல் சமன்பாட்டை மாற்றக்கூடிய சக்தியாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் இடம் பிடிக்கும் இந்த அணுகுமுறை, தேர்தல் முடிவுகளில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
9952535469
நிருபர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

