அரூர் கலைஞர் நூலகத்திற்கு நாலு மாசமா வாடகை கொடுக்கலையாம்..! ''உங்கள் கனவை சொல்லுங்கனும் கேட்டிங்க சொல்லிட்டோம்" நிறைவேறுமா கனவு ..!
தமிழ்நாட்டில் மக்களிடத்தில் சாதி மத கலவரங்களை தூண்டும் சங்கி கூட்டங்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க கட்டாய போர்களத்தில் இருந்து இந்தியாவில் நல்லாட்சி செய்யும் பணியில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக கட்சியில் பெரியாரை நேசிக்கும் பல்வேறு நிர்வாகிகளிடமிருந்தும் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பெரும் பாராட்டை பெற்று வருகிறார்.
அப்படி அவர் மட்டும் செய்தால் போதாது பொறுப்பாளர்களும் திமுக கழகத்தின் கொள்கையையும், மக்களிடத்தில் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற வேண்டும். மற்றவர்களை போல எடப்பாடி இருக்கும் கூட்டணியில் கூட்டணி வைத்தால் தூக்கு போட்டு சாவேன் என்று சொன்னவன் இன்னைக்கு கூட்டணி வைத்துள்ளான் அந்த அளவிற்கு கேவலமாக தருமபுரி திமுக கிழக்கு மாவட்டம் செயல்பட்டு வருவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தருமபுரி திமுக கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து பொறுப்பாளர்களுக்கு சரியான அழைப்புகள் கொடுப்பதில்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ.மணி அவர்கள் வருவதில்லை, இதனால் கட்சி பணிகள் சோர்வு நிலையில் உள்ளதாக திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 'உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தது மகிழ்ச்சி'ஆனால் சொல்லி என்ன பயன்..? அரூரில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுக கழகத்தலைவர் கொண்டு வந்த கலைஞர் நூலகத்திற்காக அலுவலகம் பார்த்து அதற்கு அட்வான்ஸ் கொடுத்து சிறப்பாக செயல்பட வைத்தார். இன்று அதற்கு வாடகை கொடுக்க முடியாமல் கட்டிட முதலாளி பெரும் வேதனை படுகிறார், இது மட்டுமல்ல தினந்தோறும் வரும் செய்தித்தாள், மற்றும் கரண்ட் பில், அதில் பணியாற்றும் பெண்ணிற்கு 4 மாதம் சம்பளம் போடவில்லை அந்த பெண்ணின் குடும்பம் எப்படி வாழும் சொல்லுங்கள் அந்த அளவிற்கு அரூரில் திமுக கட்சி படும் கேவலமாக இருக்கு கலைஞர் நூலகத்திற்கு வாடகையும் அதில் பணி புரியும் பெண்ணிற்கு சம்பளமும் கொடுக்க சொல்லுங்க இதுதான் எங்கள் கனவு சீக்கிரம் இதற்கு நடவடிக்கை எடுக்க சொல்லுங்க அரூர் முழுவதும் திமுக கேவலப்பட்டு சிரிப்பா சிரிக்குது ..
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0