தூய்மை இந்தியா பாரத திட்டத்தை கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி - தருமபுரியில் பரபரப்பு - பாதிக்கபட்ட சலூன் கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சலூன் கடை முன்பு குப்பை தொட்டிகள் வைத்து அராஜகம் செய்கிறார்...
பா ஜ க நிர்வாகியும், ஊராட்சி மன்ற தலைவருமான சிவசக்தி என்பவர் மீது.. பாதிக்கப்பட்ட மருத்துவர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மானியதள்ளி கிராமத்தில் முடி திருத்தும் நிலையம் (சலூன் கடை ) நடத்தி வரும் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தவர்..
தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 36 வருடங்களாக தனது தந்தை காலத்திலிருந்தே முடி திருத்தும் (சலூன் கடை) நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் மானியதள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக நிர்வாகியுமான சிவசக்தி என்பவர் சலூன் கடையினை திறக்காதவாறு கடை முன்னர் குப்பை தொட்டிகளை வைத்து, கொலை மிரட்டல் விடுத்து அராஜகம் செய்வது வருவதாகவும் வாழ்வாதாரமாக உள்ள தங்களது கடையினை மீட்டு தரவேண்டுமென புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்
பண பலம், ஆட்கள் பலம் கொண்ட பா ஜ க நிர்வாகியான சிவசக்தியினை எதிர்த்து தங்களால் போரடமுடியவில்லை, இது குறித்து தொப்பூர் காவல்நிலைய போலீஸ் புகாரளித்து விசாரணை நடந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்து சிவசக்தி மிரட்டல் விடுத்து வருவதால் குடும்பமே வாழ வழியின்றி தவித்து வருவதாக கூறும் ராஜசேகர் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்களை காப்பாற்ற வேண்டும், வாழ்வாதாரமாக இருந்து வரும் கடையினை மீட்டு தர வேண்டுமென கோரிக்ககை விடுத்துள்ளனர்
Comments
Post a Comment