போலி மருத்துவர் - பாப்பிரெட்டிப்பட்டி அருகே தமிழக முதல்வரின் ஆதரவில் ! போலி மருத்துவர்... மருத்துவ ஆய்வுக்குழு நன்றாக தூங்குதாமே !!! தருமபுரியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார ?
வெங்கடசமூததிரம் பஞ்சாயதிற்குட்பட்ட பகுதியை சுற்றி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகன்றனர். இவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் போது பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் பல நேரங்களில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் , மற்றும் , அவசர உதவிக்கு தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததால் வெங்கடசமூத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை அறிந்த வெங்கட சமுத்திரம் நான்கு ரோடு அருகே உள்ள - தேவி வயது 44 - 10'ஆம் வகுப்பு படித்து கொண்டு யூ டூயூபில் மருத்துவம் பயின்று மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றார்.
நேற்று மாலை சுமார் 5-30 மணியளவில் ஒரு விவசாயி தன்னுடைய மகனை அழைத்து கொண்டு போலி மருத்துவர் தேவியிடம் சென்றுள்ளார். அப்போது தேவி நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கும், உறிய அதிகாரிகளுக்கு 10, ஆயிரம் 15 ஆயிரம் கொடுத்துட்டுதான் இது போன்ற வேலையை செய்கிறேன. அதுமட்டுமில்ல என்னுடைய தம்பி ஸ்டாலினிடம் வேலை பார்கிறான். நான் முதல்வரின் சப்போட்லதான் இத செய்யுறேன் என்னைய யாரும் ஒரு ஆபாச வாதையை கூறி செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
பிறகுதான் அந்த போலி மருத்துவருக்கு தெரிந்தது நாம பேசியதெல்லம் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளரிடம் என்று ! அப்போது உடனடியாக தனது வீட்டில் உள்ள மதுபாட்டில், மருந்து, ஊசி, மற்றும் இவர்தான் சிறந்த மருத்துவர் என நம்பி வந்த நோயாளிகளை பத்திரமாக தனது வீட்டில் மறைத்து வைத்தார்.
போலி மருத்துவர் தேவி எல்லாம் அதிகாரிகளுக்கும் தெரிந்துதான் இத நடத்துறேன் என்று கூறுவதை நினைத்தால் அப்போ இவர் பின்னாடி யார் அந்த அதிகாரி என பெறும் சந்தேகத்தை எழுப்புகிறது. இது போன்ற போலி மருத்துவர்களால் சமீபத்தில் கூட பாலக்கோடு அருகே சட்ட விரோதமாக நடந்த கருக்கலைப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் உயிர் பறிபோனது.
அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற போலி மருத்துவர்கள் உள்ளார்களா ? என்று ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் அதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என பாப்பிரெட்டிப்பட்டி தகுதி வாய்ந்த மருத்துவர்கள், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment