தொப்பூரில் சாமந்தி பூக்கள் தொடர் நோய் தாக்குதல் மண்ணோடு சேர்த்து உழவு செய்த போது துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுத விவசாயி

தொப்பூரில் சாமந்தி பூக்கள் தொடர் நோய் தாக்குதல் மண்ணோடு சேர்த்து உழவு செய்த போது துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுத விவசாயி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் விவசாயி வயது 72 தன்னுடைய இந்த வயதிலும் தொடர்ந்து தன்னுடைய 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு மாடு வளர்த்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாமந்தி பூக்கள் தன்னுடைய நிலத்தில் நடவு செய்ய முடிவு செய்து நர்சரியில் முதல் தரமான பூ  நாற்றினை ஒரு நாற்று மூன்று ரூபாய் என்ற விலை கொடுத்து வாங்கி வந்து தன்னுடைய வயலில் நடவு செய்துள்ளார். இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு தருணங்களாக அறுவடை செய்யும் அளவிற்கு இரண்டு மாத இடைவெளியில் நடவு செய்துள்ளார். தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில் மொட்டுக்கள் விரிந்து பூக்கள் பூக்கும் தருணத்தில் தொடர் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதற்காக பூச்செடிகளையும் பூக்களையும் பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்தையும் தொடர்ந்து தெளித்துள்ளார். இருப்பினும் நோயின் பாதிப்பும் வீரியமும் குறையவில்லை. இதனால் சாமந்தி தோட்டத்தில் பூக்கள் பூத்தும் ஒரு பூ கூட அறுவடை செய்யும் முன்பே அனைத்தும் நோயால் முழுமையாக தாக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முடிந்த விவசாயி வேறு வழி இன்றி தோட்டம் முழுவதையும் டிராக்டர் கொண்டு செடி பூக்கள் உள்ளிட்டவற்றை மண்ணோடு மண்ணாக உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது உழவு செய்து பூக்கள் மண்ணோடு மண்ணாக கலப்பதை கண்டவுடன் மனம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

இதுகுறித்து விவசாயி மாரியப்பனிடம் கேட்ட பொழுது நான்கு மாதங்களாக தொடர்ந்து பராமரித்து வந்து அறுவடை செய்யும் நேரத்தில் இந்த நோய் தாக்குதலால் செய்த செலவுகள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் வீணாகப் போனது. இதற்காக பல விதமான மருந்துகள் தெரிந்தும் நோயின் தன்மையும் வீரியமும் குறையாததால் ஒட்டுமொத்த தோட்டமும் நோய் தாக்குதலில் பாழாகிப் போனது. இந்த பூக்கள் நடவு செய்வதற்கு முன்பு டிராக்டர் கொண்டு உழவு செய்த கடனையே இதுவரை என்னால் கொடுக்க முடியவில்லை தற்பொழுது பூக்களும் அழிந்து விட்டதால் மற்ற கடன்களை எல்லாம் எவ்வாறு அடைப்பது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். தமிழக அரசு எங்களைப் போல பூக்கள் பயிரிடும் விவசாயிகளையும் சற்று ஏறெடுத்து பார்த்து இது போல கடுமையான பாதிப்புகள் ஏற்படும் போது இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Comments