கால் வலிக்க.. முகமெல்லாம் வியர்த்து கொட்ட... மருந்து சீட்டு கொடுக்க கணினி இல்லாமல் மக்களை திணற வைக்க கடமைக்கு வைத்த அரூர் மருத்துவ கேம்ப்....
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்டம் பதிவு செய்யப்பட்டன. இம்முகாமில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை, எக்கோ பரிசோதனை, இசிஜி, முழு உடல் பரிசோதனை, காசநோய், பல் மருத்துவம், மார்பக புற்றுநோய், மனநல மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டனர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் ஸ்கேனிங் மெஷின் இரண்டு மெஷின்கள் மட்டுமே இருந்ததால் இங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் தரையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
குடிநீர், இருக்கை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். அதேபோல வெளி நோயாளிகளுக்கு வழங்கப்படும் சீட்டு பதிவு செய்வதற்கு வைக்கப்பட்ட இரண்டு கம்ப்யூட்டர்களும், பழுது ஏற்பட்டதால் வெளி நோயாளி சீட்டை வாங்குவதற்காக அலைமோதிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தாய்மார்கள் கர்ப்பினி பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மருத்துவ நிர்வாகம் அலட்சிய போக்கில் செயல்பட்டதால் மக்களுக்காக நடத்தப்பட்ட முகாம் வந்திருந்த அனைத்து பொதுமக்களையும் முகம் சுளிக்கும் வைக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்தை திட்டி தீர்த்தனர்.
Comments
Post a Comment