பாப்பிரெட்டிப்பட்டியில் போலி மருத்துவர் கைது தர்மபுரி மருத்துவ இணை இயக்குனர் சாந்தி கையும் களவுமாகப் பிடித்தார்
பாப்பிரெட்டிப்பட்டியில் போலி மருத்துவர் கைது
தர்மபுரி மருத்துவ இணை இயக்குனர் சாந்தி கையும் களவுமாகப் பிடித்தார்
தர்மபுரி மாவட்டத்தில் குக்கிராமங்கள் அதிக அளவில் போலி மருத்துவர்களும் இருந்து வருகிறார்கள்
இதனால் கருக்கலைப்புக்கள் தவறான சிகிச்சையால் உயிர் இழப்பு பக்க விளைவுகள் போன்ற பிரச்சினைகளை தர்மபுரி மாவட்டம் மக்கள் பெரும் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்
இந்த பிரச்சனை தர்மபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் போலி மருத்துவர்களை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது
இதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் என்ற இடத்தில் வீட்டிலேயே பொது மக்களுக்கு ஊசி போடுதல், மருத்துவம் பார்த்தல் போன்ற பணிகளை நீண்ட காலமாக செய்து வந்த தேவி என்கின்ற வரை தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர சாந்தி நேரடியாக களத்தில் இறங்கி போலி மருத்துவரின் வீட்டுக்கே சென்று கையும் காலமாக பிடித்தார்
சாந்தியின் வீட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவர்கள் பரிசோதிக்கும் ஸ்டேட்டஸ் ஸ்கோப் போன்ற பொருட்களையும் கைப்பற்றினர்
போலி மருத்துவர் தேவியின் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
இந்த நடவடிக்கை தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த நடவடிக்கை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment