9 லட்சம் ரூபாய் மோசடி செய்த விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட செயலாளர் கலை அரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக
9 லட்சம் ரூபாய் மோசடி செய்த விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட செயலாளர் கலை அரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு
போலீசார் கைது செய்தனர்
சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியன் , அவரது மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும்,
இரண்டாவது மகன்
முருகதாஸ் என்பவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் மற்றும் கலையரசன். இதில் சுரேஷ்குமார் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் குமார் மற்றும், மாவட்டச் செயலாளர் கலையரசன் ஆகியோரிடம் கடந்த 2017 ம் ஆண்டு ரூபாய் 11 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 வருடமாக வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால், பாண்டியன் மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தலா ரூபாய் 2 லட்சத்திற்கு 5 காசோலைகளும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலையும், பாண்டியனிடம் கொடுக்கப்பட்ட நிலையில், ரூபாய் 2லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. மீதி9 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டும் தராத நிலையில், வங்கி காசோலையும் பணம் இன்றி திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது பாண்டியன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலையரசனை மட்டும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சுரேஷ்குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை.
Comments
Post a Comment