செய்தியாளர் மீது போதையில் கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திய அரூர் துணை காவல் ஆய்வாளர் - எதுக்கு பிரச்சன காவல்துறை உங்கள் நண்பன் !! டீலா நோ டீலா???


சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன்
தர்மபுரி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் கடந்த 2-09-2022 ஆம் தேதி இரவு 9-30 மணிக்கு  பணியை முடித்துவிட்டு வீட்டில் தனது தம்பியை இறக்கிவிட்டு அரூர் 4 ரோடு சாலை அருகில் உள்ள ( கொங்கு ட்ரேடர்ஸ் ) அருகே இருசக்கரவாகனத்தில்  வந்துகொண்டிருந்த செய்தியாளர் சீனிவாசன் மீது மதுபோதையில் காரை ஓட்டிவந்த போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். 


அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் காரின் நம்பரை பதிவுசெய்து செய்தியாளர் சீனிவாசன் என்பவரிடம் கொடுத்துள்ளனர். பிறகு அந்த கார் சென்ற வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் அரூர் காவல்நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் தங்கும் விடுதி அருகே இருந்துள்ளதது.


இந்த காரை பற்றி அருகில் விசாரிக்கும்போது தள்ளாடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த துணை காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மரியாதை இல்லாமல் தரைக்குறைவாகவும், என் மனைவியை நீ கைய பிடிச்சி இழுத்த என சொல்லி ஸ்டேஷன்ல வச்சி சாகடித்துவிடுவேன்னு ஜெய் பீம் படத்தில் காவல் துறை எப்படி அப்பாவி மக்களை கொலை செய்து மறைக்குமோ அதே ஆதிக்க சிந்தனையில் தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற தோரணையில் பேசியுள்ளார் ராமகிருஷ்ணன்..பிறகு தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தன்னை இடித்துச்சென்ற கார் கண்ணாடியை உடைத்துளார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் செய்தியாளரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

 ஏற்கனவே பலத்த காயமடைந்த ரத்தம் வடிந்த நிலையில்  துணை காவல் ஆய்வாளர், செய்தியாளர் சீனிவாசனை கீழே தள்ளியதால் இன்னும் அதிகாமாக ரத்தம் வந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவந்த செய்தியாளரை அரூர் காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை செய்துள்ளார். பிறகு இரண்டுநாள் 3 நாள் கழித்த பின்புதான் ராமகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பிறகு தமிழ்நாடு,மாவட்டம்,தாலுகா வாரியாக உள்ள பத்திரிக்கையாளர்கள்,மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் இதுதான் நடவடிக்கையா என அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு அவர்களிடம் கேட்ட போது, காவல்த்துறையும்,செய்தியாளரும், நட்புறவா இருக்கோம் இதை எதுக்கு பெருசு படுத்துறீங்க, அப்புறம் எப் ஐ ஆர் போட்டா சீனிவாசனால வெளிநாடு போகமுடியாது, எப் ஐ ஆர் போட்டா ரண்டு பேரு மேலையும் போடணும் பாத்துக்கோங்க எதுக்கு பிரச்னை என்று மறைமுகமாக காவல்துறை மிரட்டுகிறது.

ஆனால் பின்வாங்காத ஒரே பாதையில் நிற்கும் செய்தியாளர் சீனிவாசன்  மற்றும் செய்தியாளர் சங்கங்கள்  மதுபோதையில் விபத்து ஏற்படுத்திவிட்டு ஒரு மனம் இறங்கிகூட பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்க மனமில்லை, மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல மனமில்லை அந்த அளவிற்கு அந்த காவலதுறையோட மனம் இருக்கிறதென்றால் இவரால் எப்படி  சமூகத்திற்கு சேவை செய்யமுடியும், அப்படி என்னம் இல்லாத நபர் இருக்கும்போது அவர்க்கு எப் ஐ ஆர் போட்டால் என்ன ? செய்தியாளர் சீனிவாசனுக்கு போட்டா என்ன போடுங்க என செய்தியாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. முதலில் இந்த பிரச்னை யாரால் உருவாக்கப்பட்டது, அந்த பிரச்சனையை அமைதி படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஒரு சமநிலை கொண்ட மனிதனுக்குள் தாக்குதல் ஏற்படுத்தும் சிந்தனையை உருவாக்கும் மனம் கொண்ட காவல் ஆய்வாளர் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள் கார் கண்ணாடிக்கான தொகையை கொடுத்துவிடுகிறோம் என்று உறுதி அளித்தனர் செய்தியாளர் சங்கங்கள். 

அதாவது சாதாரண மக்கள் வாகனம் ஓட்டும்போது இதுதாண்டா சரியான வசூல் டைம்னு டார்கெட் வச்சி மதுபோதையில் வந்ததர்காக (பிரிவு 188) - ( பிரிவு 1988 ) ன் படி வழக்குப்பதிவு செய்து 10000 ஆயிரம் அபராதம் விதிச்சி 15 நாள் சிறைதண்டனை கொடுப்பாங்க,


அதே காவல் துறை செஞ்சதுன்னா நமக்குள்ள எதுக்கு பிரச்சன காவல்துறை உங்கள் நண்பன்னு முடிச்சுடுவாங்க....

Comments