தஞ்சை: நவ,18-
கும்பகோணம் மாநகராட்சியில் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையரின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலால் மனமுடைந்த அங்கன்வாடி ஊழியர் ஒருவர் (18.ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
பாதிக்கப்பட்டவர்: கும்பகோணம் கொற்கை பகுதியை சேர்ந்த மாநகராட்சி அங்கன்வாடி ஊழியர் சித்ரா. வயது (60) இவர் நாச்சியார் கோவில் பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார் தற்போது (எஸ்ஐஆர்) பணியில் இருந்து வருகிறார் இந்த நிலையில்
"குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்" மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ். supervisor கார்த்திகேயன் ஆகியோர் (SIR படிவங்கள்) உடனடியாகப் பூர்த்தி செய்து நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆணையர் சித்ராவைப் மோசமான முறையில் திட்டியதாகவும், தொடர்ந்து கடுமையான மன அழுத்தத்தை அளித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையரின் நெருக்கடியைத் தாங்க முடியாமல், சித்ரா மனமுடைந்து பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனை அறிந்த அருகில் இருந்த அரசு ஊழியர்களால்
சித்ராவை உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து
மருத்துவமனையில் சித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மீதான பணி நெருக்கடி, ஒரு ஊழியர் தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் அளவுக்கு மோசமாக இருப்பது, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த சிபிஎம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் சித்ராவிற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தும், கடுமையான எதிர்ப்பும் தெரிவித்தனர், மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment