ஆசிரியர் உணவு அருந்தியதால் இடமாற்றம் செய்த வினோதமான தருமபுரி சி இ ஓ,,,! - இப்படி இருந்தா தருமபுரி கல்வி விளங்கிடும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுக்கதைகளை நம்புகின்றாரா..?


ஆசிரியர் உணவு அருந்தியதால் இடமாற்றம் செய்த வினோதமான தருமபுரி சி இ ஓ,,,! - இப்படி இருந்தா தருமபுரி கல்வி விளங்கிடும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கட்டுக்கதைகளை நம்புகின்றாரா..?

ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் "குரு" என்ற அந்தஸ்து முக்கியமான உயிர் நாடியாக இருக்கின்றது.  காரணம் ஒரு மனிதன் நல்லது, தீயது, நட்பு, காதல், காமம், துரோகம், வீரம், செயல், பலம், பலவீனம், துணிவு, எதிர்ப்பு,  ஞானம், இணைதல், பிரிதல், துன்பம், இன்பம், நடிப்பு, சிரிப்பு, கோபம், வெட்கம், பணிவு, பகுத்தறிவு,  என  மனித மான்பிற்கு தேவையான  பன்முகங்களை  உணர்த்தி வழிநடத்துபவர் (ஆசிரியர்) எனும் குருவே..! 


அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மீது ஆவதூரு  பரப்புவர்கள் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பிற்போக்கு தனமான சங்கி  கட்சிகளில் இருந்துகொண்டு மதம் எனும் மத போதையில் ஊறிப்போன ஆசிரியர்கள் செய்வது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் மனித உரிமங்களுக்கும் தனிப்பட்ட மனித  சுதந்திரத்திற்கு விடியல் கொடுத்தா.. தமிழ்நாட்டில் திமுக ஆளும் இந்த திராவிட ஆட்சியில் ஒரு பெண் ஆசிரியர் தனி அறையில் அமர்ந்து உணவு அருந்தியதை எப்போது பார்த்தாலும் பாமக, கட்சிக்கு ஆதரவாக சாதி அரசியல் பேசும் தலைமையாசிரியர் பழனிச்சாமி என்பவர் தலைமை ஆசிரியர் அறையின் அருகில் காலை 10 : 25 மணி அளவில் உணவு அருந்தி கொண்டிருந்த மரியா ஷில்பா பெண்  ஆசிரியரை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து அதனை எடிட் செய்யும்போது ஏதோ நேரில் பேசுவதை போல அந்த ஆசிரியரிடம் பேசுவது மாதிரி பின்னணி  டப்பிங் குரல் கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெண் ஆசிரியர் மரியா ஷில்பா அவர்களுக்கு பெரும் அவமானத்தையும்,  பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளார் தலைமையாசிரியர் பழனிச்சாமி.



தலைமையாசிரியர் பழனிச்சாமி.

  இந்த  சம்பவம் தருமபுரி கல்வி களத்தில் பெரும் கேவலமான செயலாக உள்ளது என்று பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படிப்பட்ட சம்பவம் எங்கே  நடந்தது...? 

தருமபுரி லக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஷில்பா 

பள்ளியில் அடிக்கடி மாணவர்களை ஒன்று திரட்டி மாணவர்களின் தனித்திறமைகளை மாநில அளவில் கலைத் திருவிழாவின் மூலம் தன் சொந்த செலவில் முயற்சி எடுத்து முதலிடம் பிடித்த மரியா ஷில்பா


ஆசிரியரை சில ஆண் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை என்று கூறப்படுகிறது.  மேலும்  ஸ்கவுட் மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை போல ஆடைகள் வழங்கி வழி நடத்தியதால் பள்ளியில் பெரும் பொறாமைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளார். மேலும் பள்ளியில் ஆய்வக உதவியாளராக இருக்கும் பாலமுருகன் என்பவர் மக்கள் நீதி மையம் கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்து கொண்டு வெளியில் கட்ட பஞ்சாயத்து செய்வதையே பொழப்பாக வைத்து கொண்டு இருப்பவர் பல்வேறான கட்டு கதைகளை அவிழ்த்து விட்டதால்,  ஆசிரியர் மரியா ஷில்பா மீது என்ன எண்ணம் கொண்டாரோ..! 

தெரியவில்லை தலைமை ஆசிரியர்."

 அருகில் உள்ள தனி  அறையில் அமர்ந்து கொண்டு மரியா ஷில்பா ஆசிரியரிடம்  அவதூறு வார்த்தைகளால் பேசி தவறுதலாகவும் நடந்து கொண்டுள்ளார். 

இது முடிந்த பின்னர் மீண்டும் தான் தப்பிப்பதற்காக உணவு அருந்தி கொண்டிருந்த ஆசிரியர் ஷில்பா வை தன்னுடைய செல்போனில் படம் பிடித்து ஏதோ உணவு சாப்பிட்ட ஆசிரியர் கொலையே செய்தது போல பில்டப் கொடுத்து கூட்டமாக சேர்ந்து சூரியன் வடக்கில் உதிக்கும் என்று சொன்னால் ஓ அப்படியா என்று நம்பி கொண்டு.. "  சூரியன் கிழக்கில் தான் உதிக்கும்" என்று சொல்லும் உண்மையான நபரை தண்டிக்கும் " வினோதமான  தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா.."

அவர்கள் என்னெவென்றே  விசாரிக்காமல் உடனடியாக மரியா ஷில்பா மீது சமூக வலைதளங்களில் வீடியோ வந்து விட்டது என்று  பொய் கதைகளை  கூறி ஆதிக்க சாதியின் அதிகாரத்தை காட்டி நம்ப வைத்த தலைமையாசிரியர் பழனிச்சாமி  மிரட்டலுக்கு பின்னால் இருந்து இயக்கும் குணசேகரன் மிரட்டலுக்கு பயந்தும்  இடமாற்றம் செய்து உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளார் வினோதமான  தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா.."

 

இந்த கடிதத்தை ஆசிரியர் மரியா ஷில்பா வாங்காதது போல தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அறிவின் சுடரொளி என்ற நினைப்பில் மரியா ஷில்பா-விற்கு நீங்கள் இடம் மாற்றத்திற்கான கடிதத்தை இன்னும் வாங்கவில்லை என இரண்டு முறை கடிதம் அனுப்பியுள்ளார். அப்படி அனுப்பினால் 4 முறைக்கும் மேல் கடிதம் அனுப்பியும் கையில் வாங்க மறுத்த ஆசிரியர் மரியா ஷில்பா ஒரு வருட காலம் கூட பணி இடை நீக்கம் செய்ய வாய்ப்பு உருவாகுமாம். அதனால் நாம் வேண்டுமென்றே ஷில்பாவிற்கு கடிதம் அனுப்புலாம் என்று பலி வாங்கும் எண்ணத்தில் இரண்டு முறை அனுப்பியுள்ளார். 

ஒரு ஆசிரியர் உணவு அருந்தியதை எவ்வளவுக்கு எவ்வளவு மோசமாக சித்தரித்து கதை விட வேண்டுமோ அந்த அளவிற்கு கதை உள்ளதே இதற்குள் என்ன இருக்கிறது ஏன் ஆசிரியர் மரியா ஷில்பா மீது இப்படி ஒரு ஒரு பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் என்று யோசிக்காமல் ஆய்வு செய்யாமல் விசாரணை செய்யாமல் ஒரு பெண்ணாக இருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா அவர்கள் பெண்மையத்தை காக்க தவறிவிட்டார் என்றே ஆசிரியர் மரியா ஷில்பா மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா அவர்கள் தலைமையேற்ற காலத்தில் இருந்தே பல்வேறு பள்ளிக்கூடங்களில் சாதி ரீதியான பிரச்சனை எழுந்து வருகின்றது.  குறிப்பாக அதிகாரப்பட்டி பள்ளி சுற்று சுவரில் திருக்குறள் பலகையை அன்பளிப்பாக கொடுத்தவர்களின் பெயரை சாதி பெயரோடு சுவரில் பதித்துள்ளனர். அதனை ஜோதி சந்திரா அவர்களிடம் கூறிய போது சார் அன்பளிப்பு கொடுதவர்களின் விருப்பம் என்று இதில் நான் தலையிட முடியாது எனவும் செல்ஃபோன் அழைப்பை துண்டித்துள்ளார். சாதியை வேரோடு அழிக்கும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வசனத்தை தன்னுடைய வாட்ஸ்அப் புரோஃபையிலாக வைத்து தன்னை இந்த சமூகத்தில் கல்விக்காகவும் ஒடுக்கபட்டவர்களுக்காகவும் இருக்கிறேன் என்று அடையாள படுத்தி கொள்கிறார் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா... ஆனால் குழுவாக சேர்ந்து , சாதி சங்கமாக சேர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஒரு நிரபராதியை குற்றவாளியாக தற்போது அறிவித்துள்ளார். ஒரு சமூக வலைத்தளங்களில் டுபாக்கூர் வீடியோ ஒன்று பதிவானதற்கு தண்டனை கொடுக்கும் ஜோதி சந்திரா மீது பள்ளிக்கூடத்தில் சாதி ரீதியான பிரச்சனை எழுந்துள்ளது என அவருடைய புகைப்படம் வைத்து செய்தி வெளியிப்பட்டுள்ளது.

இவர் மீது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ன நடவடிக்கை எடுப்பார்...? இல்ல இந்த திராவிட முன்னேற்றக் கழகம் முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுப்பார்..! என்ற கேள்வி எழுகிறது.

மேலும் ஆசிரியரின் வீடியோவை வெளியில் தவறுதலாக சித்தரித்து பரப்பியதற்காக தருமபுரி மாவட்ட காவல்துறையிடம்

மரியா ஷில்பா புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதாவது ஒரு பெண் ஆசிரியர் ஒரு ஜான் வயிற்றுக்காக உணவு அருந்தியதை அத்து மீறி வீடியோ எடுத்து அதற்கு பின்னணி டப்பிங் குரல் கொடுத்து தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட நிகழ்வுகளை வெளியிட்டது போன்ற வழக்குகளில் பதிவு செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் திடிரென்று புரட்சி புயல் திமுகவின் பீரங்கி புளியங்குளத்து புலி  சட்ட மன்ற தேர்தலில் தடங்கம் சுப்ரமணிக்கு  ஆப்பு வைத்து தேர்தலில் சரியாக ஆதரவு தராமல்  தடங்கம் சுப்ரமணியை தோற்கடித்து நானும் திமுக காரன்தான் என்று பில்டப் கொடுத்து வலம் வரும் அட நம்ம அதாங்க நம்ம திமுக எக்ஸ் எம் பி தாமரைச்செல்வன் தலையிட்டு இதில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்துள்ளாராம் என்று மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் திமுக விசிக அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா அவர்கள் பள்ளிக்கூடங்களில் நேர்மையாக பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து விடுவேன் என மிரட்டியும் தனக்கு பிடிக்காமல் இருக்கும் ஆசிரியர்களிடம் ஹிட்லர் போல் செயல்பட்டு வருகிறாராம் என்று சி இ ஓ மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இவரை உடனடியாக மாற்றவேண்டும் என்று கல்வி அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் அடிக்கடி புகார் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு நடவடிக்கை எடுப்பதில் கலாதாமதம் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது காரணம் இந்த லக்கியம்பட்டி பள்ளிக்கூடத்தில் அரசியல் தலையிடும் உள்ளது என்று கூறப்படுகின்றது, குறிப்பாக ஏற்கனவே அவ்வை நகர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த மரியாசில்பா என்பவர் மீது, உடன் பணியாற்றி வந்த ஆசிரியர்களின் காழ்ப்புணர்ச்சி காரணாமாக பொய் புகார் அளித்ததின் பேரில் அவர் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

அவர் மீது அளித்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவரின் விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை குறிப்பில் உள்ளது. ஆகவே மரியா ஷில்பா ஆசிரியரை மீண்டும் அவ்வைநகர் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிட ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று  முன்னாள் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி அவர்கள் தனது திமுக கட்சி லட்டர் பேடலில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சனி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த அளவிற்கு அரசியல் தலையீடு உள்ளது. இதெற்கெல்லாம் யார் காரணம் ஏன் மரியா ஷில்பா ஆசிரியர் மீது குற்றம் சொல்கிறார்கள் ஒரு வேலை உண்மையாகவே பள்ளிக்கூடத்தில் பெண் ஆசிரியர்களையும், படிக்கின்ற பள்ளி மாணவ  மாணவர்களையும், தவறாக ஒரு சில வாத்தியார்கள் பயன் படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மரியா சில்பாவிற்கு ஆதரவாக யார் பேசினாலும் அவருக்கும் இந்த டீச்சருக்கு ஒரு தொடர்பு இருக்குதாமே என்று காஞ்சி போன நாய் எப்படி தெருவில் கத்துமோ அப்படி தருமபுரியில் இவருக்கு ஆதரவாக இருக்கும் ஆசிரியர்களையும் மாணவர்களின் பெற்றோர்களின்  வைத்து கத்தி கொண்டு இருக்கிறார்களாம் சில டூபாக்கூருங்க.  இதற்கெல்லாம் விசாரணை நடத்தாமல் அமைச்சர் மௌனம் காத்தால் மாணவர்களின் வாழ்க்கை சீரழிந்து போகும் என்பதை அன்பில் மகேஷ் பொய்யா மொழி புரிந்து கொண்டு அதிகார வர்க்கத்தில் பொய் கதைகளுக்கு ஒரு ஆசிரியர் மீது விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்த மாவட்ட கல்வி அலுவலர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பாரா  அல்லது கட்சி காரர்கள் பொய் சொல்வதால் நம்பி மௌனம் காட்டுகிறாரா என்று பார்ப்போம்...இதனை உடனடியாக உளவுத்துறை கையில் எடுத்து விசாரணை  மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Comments