அதிகாரப்பட்டி தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்த அறங்காவலர் குழு தலைவர் அழகிரி..!
அதிகாரப்பட்டி தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்த அறங்காவலர் அழகிரி
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைகாசி மாதங்களில் அம்மன் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாக்களின் போது சொந்த ஊரை விட்டு வெளியேறியுள்ள மக்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து மக்களோடு மக்களாக சொந்தங்களோடு இணக்கமாக இணையும் விழாவாகவே இந்த வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா 6 நாட்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், காவல்துறை மின் ஊழியர்கள் என அனைவருடைய ஒத்துழைப்புடன் அம்மன் ஆசிர்வாதத்தால் அதிகாரப்பட்டி திருவிழா கொண்டாடப்பட்டது
இதனால் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அழகிரி மற்றும் அறங்காவலர் துணைத்தலைவர் கோவிந்தசாமி நன்றி தெரிவித்தனர் .
Comments
Post a Comment