சாக்கடை குளமாக மாறிய தருமபுரி இலக்கியம்பட்டி ஏரி..! - தூய்மை செய்ய லக்கியம்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை....நடவடிக்கை எடுப்பாரா தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ்..!

தர்மபுரி நகரையொட்டி உள்ள இலக்கியம்பட்டி ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தீயணைப்பு துறை அலுவலகம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், மின்சார துறை அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்,  இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி , பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி, மருத்துவமனைகள், உள்ளன. 

இந்த ஊராட்சி  தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது   தர்மபுரி-சேலம் சாலையில் செந்தில்நகர் பகுதிக்கு எதிரே இலக்கியம்பட்டி ஏரி அமைந்துள்ளது.


 இந்த ஏரியில் மழைநீர் கணிசமான அளவில் தேங்கும்போது சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 கி.மீ. பரப்பளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
குறிப்பிடத்தக்க அளவில் விவசாய நிலங்களும் இந்த ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் தற்போது தேங்கியுள்ள மழைநீரில் பாசிகள் அதிக அளவில் படர்ந்துள்ளன. இதனால் ஏரி நீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.
 
 இதனால்  அந்தப் பகுதியில் செந்தில் நகர், கலெக்டர், அழகாபுரி, ராஜாஜி நகர், ஆகிய பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் ஏரியில் கலப்பதால் நீர் மாசுபட்டுள்ளனர் . தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து மிதக்கின்றனர். மட்டுமல்லாமல் சாலையில்  வாகனங்கள் செல்லும் பொழுது துர்நாற்றம் வீசுகின்றனர்.

 இந்த ஏரியில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு  ஏரியை தூர்வாரிய இளைஞர் மன்றத்தினர்  பராமரிப்புடன் வைத்து இருந்தனர் . இதை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் இப்போது அந்த ஏரியின் நிலைமை  குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. காலை மாலை இரவு என மூன்று நேரமும் குடிமகன்கள் அந்த ஏரியில் அமர்ந்து  குடித்துவிட்டு    அங்கேயே பாட்டில்களை உடைப்பதும் அங்கே உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
 இலக்கியம்பட்டி, செந்தில் நகர், கலெக்டர், பாரதிபுரம், ஆகிய பகுதியில் இருக்கும் பொதுமக்கள்  கூறுகையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியில் காலையிலும் மாலையிலும் நடை பயிற்சி மேற்கொள்வோம்  ஆனால் இப்போது அந்த பகுதியில் நடைபாதையில் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது, அது மட்டுமல்லாமல் அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் பாதுகாப்பாக நடந்து போக முடியாத நிலையில் உள்ளது.

 நாங்கள் நடை பயிற்சி மேற்கொள்வதில்லை  இதனால்  அந்த ஏரியை குடிமகன்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்.

 முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி  அவர்கள் 2-7 2022-யில்  ஆய்வு செய்திருந்தனர் . அப்போது மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள்  பொழுதுபோக்கு வசதியுடன் சீரமைக்கப்படும் என உத்தரவிட்டனர். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆயும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியர் மெத்தனப்போக்கில் இருந்தனர் .

 இப்போது  புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் ஆய்வு செய்து நடைப்பயிற்சி மேற்கொள்ள மின்விளக்குகள், சாலை வசதிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், ஏரியில் பொழுதுபோக்குக்காக படகு சவாரி   அமைக்க வேண்டும், பொழுதுபோக்கு இடமாக மாற்று தர வேண்டும்  சமூக ஆர்வலர்கள், இலக்கியம்பட்டி  பொதுமக்கள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments