மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்-அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்-தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கைவாரம் ஒரு முறை அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தால் என்ன நடக்கும் சமூகவலைதளங்களில் எழும் காரசமான கேள்விகள்...

மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்-அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்-தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கை

வாரம் ஒரு முறை அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தால் என்ன நடக்கும் சமூகவலைதளங்களில் எழும் காரசமான கேள்விகள்...


தருமபுரி மாவட்டம், பாலக் கோடு அருகே பெருங்காடு மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 150 குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள். பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி பணிபுரிந்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறைக்கு தண்ணீர், நிரப்புவது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று 5-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை தலைமை ஆசிரியை  கூறியதாக தெரிகிறது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு அனுப்பப்படும் மாணவ-மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்து வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இச்செய்தி  வெளியானதை தொடர்ந்து

கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா  உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து பெருங்காடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் தென்றல் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

இதேபோல் பாலக்கோடு தாசில்தார் ரஜினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி. ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகளிடம்  விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை  சஸ்பெண்ட் செய்து  மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற மாணவ மாணவிகளை கழிவறையை சுத்தம் ஆசிரியர்கள் ஒரு நாள் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்தால் தெரியும் என்ன நிலை என்று ...? 

அல்லது அரசு ஊதியத்தில் பயணம் செய்யும் ஒரு சில ஆசிரியர்களின் பிள்ளைகளை கழிவறையை சுத்தம் செய்ய சொல்ல சொல்லுங்கள் அப்போது புரியும் மாணவர்களின் பெற்றோர்களின் வலி என்னவென்று என காரசாரமான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Comments