சிற்றம்பாக்கம் கிராமத்தில் அடிக்கடி மின்தடையை கண்டித்து மூன்று வழி பிரியும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - ஒரிஜினல் வீடியோ உள்ளே



திருவள்ளூர், ஜூன்.19-

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிற்றம்பாக்கம் பகுதிக்கு சரியான முறையில் மின்சார விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பகல் இரவு நேரங்களில்  கடும் அவதியுற்று வருகின்றனர்.


மேலும் மின்சாரம் இல்லாததால் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து சிற்றம் பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரம்பாக்கம் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் தங்களுக்கு சீரான முறையில் மின்சார விநியோகம் வழங்க வேண்டும் என பலமுறை புகார் செய்தும், அவர்கள் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் இன்று காலை சிற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு சீரான முறையில் மின்சார விநியோகம் வழங்க வலியுறுத்தியும், 
பேரம்பாக்கம் துணை மின் நிலைய அதிகாரிகளை கண்டித்தும் பேரம்பாக்கம் கடம்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேரம்பாக்கத்தில் இருந்து கடம்பத்தூர், பூந்தமல்லி, சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில்  சாலை நிறைந்த புறமும் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இனிவரும் காலங்களில் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை  கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.இதன் காரணமாக பேரம்பாக்கம் கடம்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments