நாட்டு நலப்பணி திட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மாணவர்கள் நெகிழ்ச்சி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை இந்தியா - பசுமை இந்தியா என்ற பணியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் சேர்ந்து 24-12-2022 - 30-12-2022 வரை நடைபெற உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோவிலைச்சுற்றி உள்ள தேவையற்ற செடிகளை புள் பூண்டு செடிகளையும் முட்களையும் அகற்றி NSS அமைப்பில் இணைந்து பொதுசேவைகள் செய்வதில் நாங்கள் பெருமை படுகிறோம். எதிர்காலத்தில் நமது சமூகத்தையும் நமது சுற்று புறத்தையும் சுத்தமாக வைப்பதற்கு இது ஒரு முதற்கட்ட தொடக்கத்தின் நம்பிக்கையான செயல் என்றனர்.
இதன் தொடக்கமாக தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் கு.குணசேகரன்,
மு.ராஜகோபால் மாவட்ட கல்வி அலுவலர் து.சக்திபால் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் NSS திட்ட அலுவலர் பள்ளியின் தலைமையாசிரியர் ஜ.அப்துல் அஜீஸ் ஆசிரியர் இரா.பார்த்திபன் கணினி NSS உதவி திட்ட அலுவலர், ஆசிரியர் மா.சிவமணி NSS உதவி திட்ட அலுவலர்,கோ செல்வம் சார்நிலை கருவூல அலுவலர் ப.தங்கதுரை ஆசிரியர் அ.தொப்பையன், ஆசிரியர் வே. சென்னகிருஷ்ணன். வெ.ராஜாமணி, சி. ஜெகஜீவன்ராம், கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட பணிகள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
Comments
Post a Comment