திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில ஆண் ஒருவர் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை உறவினர்களும் யாருமில்லை. இன்று மை தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்தவரின் உடலை எங்கள் சொந்தம் போல் எண்ணி இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தோம். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலமாக இருபது அமரர்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.
இன்று நல்லடக்கம் செய்ய உறுதுணையாக இருந்த திருப்பத்தூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ், காவலர் சிலம்பரசன் ஆகியோர் நல்லடக்கம் செய்ய உதவியாக இருந்தனர். மை தருமபுரி அமரர் சேவை சார்பாக திரு.ராகவ், மீட்பு அறக்கட்டளை பாலச்சந்திரன் ஆகியோர் அமரரை நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஆதரவற்று இறந்தவர்கள், வறுமையில் இறந்தோர் ஆகியோரது உடல்களை எங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து வருகிறோம். மை தருமபுரி சேவை இருக்கும் வரை இங்கு ஆதரவற்றவர்கள் அனாதைகள் என்று யாரும் இல்லை என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்ற அமரர் நல்லடக்கம் செய்யப்பட்டார்
Comments
Post a Comment