பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் முன்பே அறிமுகம் ஆனவர்கள்: போலீசார் அறிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என இமாசல பிரேதச போலீசார் தெரிவித்து உள்ளனர்.



பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளை வைத்து இமாசல பிரேதச போலீசார் பகுப்பாய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி:
கடந்த 3 ஆண்டுகளில் இமாச்சல பிரதேசத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் 52.4 சதவீத பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நன்கு தெரிந்தவர்களேயே நிகழ்ந்துள்ளது. இதுதவிர, நட்பின் வழியே அறிமுகம் ஆனவர்களால் 24.4 சதவீதமும், திருமணம் என்ற பொய்யான வாக்குறுதிகளின் பேரில் 16.9 சதவீதமும், லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் போது 4.1 சதவீதமும் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் 2 சதவீதமும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட பல வழக்குகள், சம்பவங்கள் நடக்க விடாமல் முன்பே தவிர்க்க கூடிய வகையை சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது என இமாசல பிரேதச டி.ஜி.பி.கூறியுள்ளார்.

Comments