BREAKING NEWS தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

*பத்திரிக்கைச் செய்தி*
*தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு*

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆணைப்படி, தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 28 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 29 காலி பணியிடங்களுக்கு ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளதால், ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு 18 வயது முடிந்த, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற (அ) தேர்ச்சி பெறாத தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தருமபுரி நகரை சுற்றி வசிப்பிடம் கொண்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தருமபுரி சாலை வினாயகர் கோவில் தெரு, தாலுக்கா அலுவலகம் முன்பு மாடியில் உள்ள பழைய நகர காவல் நிலைய முதல் மாடியில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை (Ration Card) மற்றும் ஆதார் அட்டையுடன் 28.09.2022 அன்று முதல் 01.10.2022 ம் தேதி மாலை 05.00 மணிக்குள் தங்களின் விருப்ப மனுக்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04342-260114 மற்றும் 9498170105 ஆகும்.
இவ்வாறு ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.ஜே.எ.தண்டபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments