தர்மபுரி
திமுகவின் முப்பெரும் விழாவை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் நத்தப்பட்டி பகுதியில் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் புதிய கழக கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
அப்போது அப்பகுதி மக்கள் அப்பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுத்து வாய்க்கால், மற்றும், குடிநீர் போன்ற வசதிகளை சீர்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் வந்ததாக மக்கள் புகார் அளிக்க திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தடங்கம் சுப்பிரமணி அவர்களிடம் மக்கள் சிரித்தபடி பேசி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் *திரு.வைகுந்தன் * அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் திரு.தங்கமணி , நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.AS.சண்முகம் , நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் திரு.N.P.பெரியண்ணன் , இளைஞர் அணி அமைப்பாளர் திரு. ராஜகோபால் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment