6.16 லட்சம் மதிப்பிலான 22 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்
தருமபுரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் சலவைப் பெட்டி பசுமைவீடு பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் பட்டா வேண்டுதல் வாரிசு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் பேருந்து வசதி சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும் வேலைவாய்ப்பு வீட்டுமனை பட்டா புதிய மின் இணைப்பு வசதி முதியோர் ஓய்வூதியத் தொகை இதர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள் மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 516 மனுக்கள் வரை பெற்றன எம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் நம்ம அல்லி வருவாய் கிராமம் எல்லப்பன் பாறை கிராமத்தைச் சேர்ந்த 22 இருளர் இன மக்களுக்கு 6.16 லட்சம் மதிப்பிலான 22 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அனிதா தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி விகே சாந்தி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு ஜெயக்குமார் உதவி இயக்குனர் ஊராட்சிகள் திரு சீனிவாச சேகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஐயப்பன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment