குற்ற உணர்ச்சியில் குறுகி நிற்கிறேன் - முதல்வர் முக ஸ்டாலின் !!.,

தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழகத் தலைமை அறிவித்தது மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்காக அமைந்ததும் அதிக அளவு மகிழ்ச்சியை அளித்தது அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் மறைமுக தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வு என்னை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.

 


 இதை நினைத்து கவலை அடைய வைக்கிறது பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுப்பாட்டில் மூன்றாவதாக சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

 


ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம் ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன் மதசார்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் உருகும் இது விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் கழக தலைமை அறிவித்ததை மீறி புலமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற அவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அவர்கள் அந்த பொறுப்பை விட்டு விலகி விட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் மாவட்ட கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் உரிய நடவடிக்கையை விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றியுடன் உங்கள் அன்போடு மு க ஸ்டாலின் திமுக தலைவர்

Comments