Skip to main content
தர்மபுரியில் 75 - வது சுதந்திர தின விழா சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா" "சுதந்திரத்திருநாள்" "அமுத பெருவிழா" செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த 20க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட பல்துறை பணி விளக்க கண்காட்சி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 24-03-2022 வியாழக்கிழமை அன்று முதல் 30-03 -2022 புதன்கிழமை வரை ஏழு நாட்கள் நடைபெற உள்ளது.
ஊரக வளர்ச்சி, மற்றும் ஊராட்சித் துறையின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிகல்வித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், திட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உணவு பாதுகாப்பு துறை ஆவின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
Comments
Post a Comment