சூர்யா நடித்த சிங்கம் படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தி அதனை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வியாபாரம் செய்வதாக அந்த மோசமான சூழலில் இருந்த தூத்துக்குடியை காப்பாற்ற வேண்டும் என்று சூர்யா நடித்திருப்பார். ஆனால் இது போல் உண்மையாகவே தூத்துக்குடியில் காவல்துறையினர் போதைப்பொருள் கும்பலை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் கடல் பகுதியில் போலீசார் இந்த பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Comments
Post a Comment