எடப்பாடியை ஜோக்கர் பாடியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலின்..!

 அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 


சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது


எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சியடையிறேன். கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை, அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னோட கேள்வியெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஓர் ஆளுநர் நடந்துகொள்கிறார். அவரைக் கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைகூட தர மறுத்து, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிற ஓர் ஒன்றிய அரசினைக் கண்டித்து, நீங்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் நான் உங்களை வாழ்த்தியிருப்பேன், மகிழ்ச்சியடைந்திருப்பேன்

தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யுஜிசி மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பாஜவுக்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யுஜிசி மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பாஜவுக்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்

Comments