மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு.

மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறையினர் சைவம், அசைவ, துரித உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில்  கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய், சட்டினி, மோர் உள்ளிட்டவை  தரமாக உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளிசந்தை பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்கள்  மற்றும் துரித உணவு கடைகளில்  திடீர் ஆய்வு செய்தார். 
ஆய்வில் ஒரு உணவகத்தில் சமைத்த சாதம் குளிர்பதன பெட்டியில் ஒரு சில்வர் வாளியில் வைத்திருந்தது கண்டு அவர்களை எச்சரித்து அதனை அப்புறப்படுத்தினார். 
மேலும் ஒரு உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட 2 கிலோ கோழி இறைச்சி மற்றும் தரம் குறைவான மோர் ஆகியவை    கண்டறிந்து பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. 
இரண்டு உணவகங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

உரிமம் பெறாத இரண்டு புதிய உணவகங்களுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் இது போன்று   தொடர்ச்சியாக ஆய்வு  நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

Comments