பொம்மிடி அருகே 10 மலைவாழ் மக்கள் கிராமத்திற்குக் பேருந்து இயக்கம்பட்டாசு மேளதாளத்துடன் வரவேற்ற கிராம மக்கள்

பொம்மிடி அருகே 10  மலைவாழ் மக்கள் கிராமத்திற்குக்   பேருந்து இயக்கம்


பட்டாசு மேளதாளத்துடன் வரவேற்ற கிராம மக்கள்



பாப்பிரெட்டிப்பட்டி .அக், 30-


பொம்மிடி அருகே உள்ள போதக்காடு ஊராட்சி மலைவாழ் மக்கள்  வாழம்கிராம பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமமே மகிழ்ச்சியடைந்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் வரவேற்றனர்

பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர்,கரியதாதனூர்,முல்லைநகர் என பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளனர்

 இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி கல்லூரி சென்று வருவதற்கும் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்


 அரசிற்கு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக வைத்து தனர் 

,இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சார்ந்த மலைவாழ் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணனனிடம்  பேருந்து வசதி வேண்டும் ,ஏற்காடு மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்

 இந்த நியாயமான கோரிக்கையை தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர் 


இதை அடுத்து மலை கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி.IAS,திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக்கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்


 இதை அடுத்து முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங்களை ஏற்காடு மலையோடு இணைக்கும் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது

 இதை தொடர்ந்து தற்போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து இயக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி,போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது, அதன்படி இந்த  மலைவாழ் மக்கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கம் போதகாடு பகுதியில் இருந்து பையர் நத்தம். பொம்மிடி .கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது 


திங்கட்கிழமை காலை பேருந்தின் முதல் ஓட்டத்தை  பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் சரவணன் தலைமையில் மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்,


 பேருந்திற்கு ஆளர்த்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கிராம மக்கள் வரவேற்றனர்.


 மலை கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராம மக்கள் கூறுகையில்


 எங்கள் கிராமப் பகுதிக்கு நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி, இதன் மூலமாக எங்களது பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி கல்லூரிக்கு சென்று வருவர், நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம் ,இதற்கு முழு முயற்சி எடுத்த ஓன்றிய செயலாளர் சரவணன்   தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை பன்னீர்செல்வம்  அவர்களுக்கும்,போக்குவரத்து தூறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்து கிராம மக்கள் மேலும் எங்களுக்கு ஏற்காடு மலை கிராமங்களை இணைக்கும்  தார் சாலை அமைத்து பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர்

Comments