" இனிமே இப்படி கூப்பிடாதிங்க" மயான தொழிலாளியின் உருக்குமான கதை || இவங்க நாகரிகமா வாழணும்னு நினைகிறாங்க அப்போ நீங்க எப்டி ? படித்துவிட்டு கீலே கமெண்ட் பண்ணுங்க
என்னைய எல்லாரும் வெட்டியா வீட்டு பிள்ளைன்னு கேலி செய்றாங்க சார் அதனால இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்லும் போதே அந்த சிறுமியின் கண்களில் கண்ணீர் கோர்த்து நிற்கிறது.
[12/11, 6:09 PM] EvidenceParvai.In: கோவை மயானத்தில் பணிபுரியும் சகோதரி வைரமணியின் வீட்டு குழந்தையின் வருத்தம் தான் இது பள்ளியில் படிக்கும் அந்த சிறுமியை சக மாணவர்கள் "வெட்டியான்" வீட்டுப் பிள்ளை என்று ஏளனமாக பேசுவதும் அழைப்பதும் அந்த பிஞ்சு மனதை அவ்வளவு காயத்தை உண்டாக்கியுள்ளது.
இப்படி அழைப்பது சக மாணவ குழந்தைகள் என்றால் கூட பரவாயில்லை ஆனால் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் பெருமக்கள் பெரியவர்கள் பொதுமக்கள் என பலரும் கூட மயான தொழிலாளர்களை அப்படித்தான் அழைக்கின்றனர்.
துணி எடுப்பவர் சலவைத் சலவை தொழிலாளியாகிவிட்டனர்.
சலூனில் வேலை பார்ப்பவர்கள் முடி திருத்துபவர்களாகிவிட்டனர்.
குப்பை கூட்டுபவர் துப்புரவு தொழிலாளராக ஆகிவிட்டனர். குடிகாரர்கள் கூட மது பிரியர்கள் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் மயான தொழிலாளர்கள் மட்டும் ஏன் இன்னும் வெட்டியானாகவே அழைக்கப்படுகின்றனர்
என்பது வேதனையான கேள்விதான்.
இத்தனைக்கும் ரத்தமும் சதயமாக வளர்த்த பெற்றவர் என்றால் கூட கொல்லி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடும் போது அந்த பெற்றவர் நல்லபடியாக சாம்பலாகும் வரையோ அல்லது அடக்கம் செய்யப்படும் வரையிலோ கடைசி வரை இருந்து பார்த்துக் கொள்பவர்கள் மயான தொழிலாளர்கள் தான் ஆனால் அந்த மயான தொழிலாளர்களை பாரபட்சம் இல்லாமல் இன்று வரை எல்லா மயானங்களிலும் அவமானப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.
பல லட்சம் செலவிட்டு இறுதி சடங்கு செய்பவர்கள் கூட கடைசியில் சில நூறுகளுக்கு மயான தொழிலாளி இடம் பேரம் பேசுவதும் தரையில் விரித்து வைக்கும் தூண்டில் பணத்தை அலட்சியமாக விட்டு எறிவதும் பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசம் இன்றி மரியாதை குறைவாக அழைப்பதும் தொன்று தொட்டு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த அவமானங்களை எல்லாம் உடைத்தெறிந்து வெளியே வர உதவும் ஒரே கருவி கல்விதான் என்பதால் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால் அங்கும் அவர்களை அவமதித்தால் பாவம் அவர்கள் என்னதான் செய்வார்கள் எங்களுக்கு என்று எந்த ஒரு படியான அமைப்பும் இல்லை எங்கள் குரலை காது கொடுத்து கேட்கும் யாருக்கும் நேரமில்லை.
காரணம் எங்கள் எண்ணிக்கை மிகக் குறைவு மயான தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் அவர்கள் வீட்டு வீட்டு குழந்தைகளுக்கு இலவச கல்வி இருப்பிட வசதி என்று ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை அது நடக்கும்போது நடக்கட்டும் அதுவரை நாங்கள் கேட்பதெல்லாம் சமூக மரியாதை தான் குறைந்தபட்சம் முகம் கொடுத்து பேசுங்கள் மயான தொழிலாளி என்று அழையுங்கள் அது போதும்,
என்று வேதனையுடன் கோவை மயானத்தில் பணிபுரிந்த சகோதரி வைரமணியின் வீட்டு குழந்தையின் வருத்தமான கதை இது
Comments
Post a Comment