சிறப்பு தடுப்பு பிரிவில் பாராட்டு வாங்கிய இரண்டு காவலர்கள் கஞ்சா பார்ட்னர் _ வேலூர் காவல்துறையினர் அதிர்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும் இதனால் கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு வேலூர் மாவட்ட காவல் துறை மெத்தனப் போக்கை கடைபிடித்து வந்தனர்.
என்பதற்கு இதுவே ஒரு ஆதாரப்பூர்வமான தகவலா !!!
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து வேலூர் மண்டல காவல் தலைவருக்கு அதிக புகார்கள் வந்ததை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் சிலர் துணையாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு குழுவை அமைத்து மறைமுகமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.
பிறகு விசாரணை முடிவில் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் கண்ணன் சோளிங்கர் தலைமை காவலர் வேணுகோபால் மற்றும் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எழுத்தாளர் ரமேஷ் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவலர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
என எச்சரித்துள்ளார் இது ஒரு புறம் இருக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வேணுகோபால் கண்ணன் ஆகிய இருவரும் கடந்த 13 9 2022 ஆகஸ்ட் மாதத்தில் குற்ற செயல் தடுப்பு பிரிவில் சிறப்பு சிறப்பாக பணியாற்றியதற்காக இவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம் பாராட்டு சான்றிதழை மற்றும் நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
என்ன கொடும சரவணன் இது !!!!!?????
Comments
Post a Comment