பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு தேனி பேருந்து நிலையத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இது போக்குவரத்து நெரிசலை உருவாக்கியது என்று காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது !
தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள காந்தி சிலையின் முன்பு பெரியாரின் திருஉருவப்படம் வைத்து திராவிட கழகத்தினர் மற்றும் தோழமை கட்சியினரின் சார்பில் 144 வதுபிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். அதன்பின்னர் ஊர்வலம் நடத்துவதற்கு தயாராகினார்கள்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி கொடியேந்தி ஊர்வலம் ஆக அங்கு வந்து பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்கள்.
சமாதான பேச்சு வார்த்தைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உடன்படாததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கம்பம் நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவி வந்தது.
Comments
Post a Comment