தென்மேற்கு பருவமழை தீவிரம்: கோவையில் 111 சதவீதம் !

கோவை:கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பொழிந்துள்ளது.தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1ல் துவங்கும். நடப்பாண்டு மே மாதம் இறுதியில் துவங்கி, ஜூனில் ஓரளவு பொழிந்தது.ஜூலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பரவலான மழை பெய்கிறது.



ds bylatest tamil news

குறிப்பாக, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல், நேற்று வரை 92.1 செ.மீ., மழை பெய்து உள்ளது. இது, இக்கால கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான அளவை விட, 111 சதவீதம் அதிகம்.இதே காலகட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 14.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 196 சதவீதம் அதிகம்.நீலகிரி மாவட்டத்தில், 120.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட, 142 சதவீதம் அதிகம் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news



தொடர் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் முழு அளவை எட்டியுள்ளன.

Comments