பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண்மிதிலா பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். இதில் அவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.
இதே பல்கலை.,யை சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை நிர்வாகம் வழங்கி உள்ளது.
Comments
Post a Comment