தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஒரே நாளில் 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 16) 15,292 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 253; செங்கல்பட்டு 129; கோவை, காஞ்சிபுரம் 32; திருவள்ளூர் 30; கன்னியாகுமரி 14;திருநெல்வேலி 8 ,நீலகிரி 6, ராணிப்பேட்டை,தஞ்சாவூர் 5; சேலம், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி 4; ஈரோடு, துாத்துக்குடி மற்றும் சிவகங்கை 3; தென்காசி, கடலுார், மயிலாடுதுறை திருச்சி 2; நாமக்கல், கரூர், அரியலுார்,பெரம்பலுார், திருவாரூர் மற்றும் வேலுாரில் தலா ஒருவரையும் சேர்த்து 552 பேருக்கு தொற்று உறுதியானது.
கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம் , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை, ராமநாதபுரம், தி.மலை, தேனி , திருப்பூர், திருப்பத்துார்,விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் கோவிட் தொற்று ஒன்று கூட பதிவாகவில்ல.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,58,997ஆக அதிகரித்துள்ளது. இன்று 177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,18,658 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று (16 ம் தேதி) 253 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment