சென்னையில், உள்ள முக்கிய ரயில் முனையங்களில் எழும்பூரும் ஒன்று. இந்நிலையம், இந்தோ - சாராசனிக் பாணியில், கட்டப்பட்டு, 1908ம் ஆண்டு, ஜூன், 11ம் தேதி திறக்கப்பட்டது. பல்வேறு காலக்கட்டங்களில் தேவையான வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது, 11 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது.
இத்துடன், நிலையத்தில் பயணியருக்கான தங்கும் இடவசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன. நடை மேடைகள், நடை மேம்பாலங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. மின் துாக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் நிறுவப்பட உள்ளன. இரு சக்கர, நான்கு சக்கரங்களுக்கு, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளன.
நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள், வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகள் நிறுவப்பட உள்ளன.பூந்தமல்லி சாலை நுழைவு வாயில் பகுதியில், தேவையான கட்டடங்கள் கட்டப்படுவதுடன், நுழைவு வாயிலும் வரவேற்பு வளைவும் கட்டப்பட உள்ளது.பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தையும், இரண்டு ஆண்டுகளில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள், வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகள் நிறுவப்பட உள்ளன.பூந்தமல்லி சாலை நுழைவு வாயில் பகுதியில், தேவையான கட்டடங்கள் கட்டப்படுவதுடன், நுழைவு வாயிலும் வரவேற்பு வளைவும் கட்டப்பட உள்ளது.பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தையும், இரண்டு ஆண்டுகளில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
Comments
Post a Comment