கூட்டணி தருமத்தை காக்க பல வழிகள் உண்டு || பொதுச் சொத்தை அழித்து கேட்கலாமா ?


 
 
வளர்ந்த சமூதயத்தின் முன் வளராத சமூதாயம் தன்னை வளர்த்துக்கொள்ள கடன் பெற்று செலவு செய்திருக்கலாம் அந்த நம்பிக்கை வீண் போகும்போது ஆத்திரமும் ஆவேசமும் வருவது இயற்கை, அப்போதுதான் எதிரே வருபவர் யார் என்று தெரியாமலும் பொதுச்சொத்தை அழிப்பதும், போக்குவரத்திற்கு இடையுராக இருப்பதும், தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பிற்கு வாடிக்கையாக உள்ளது. இப்படி நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சமூதாய மக்களை பெரியார் வழியிலும் அற வழியிலும்,  தன் வாழ்க்கையே அற்பணித்துக்கொண்ட ஒரு தலைவருக்கு தொண்டர்கள் தன்னுடைய காணிக்கையாக நற்பெயர்களையே வாங்கி தரவேண்டும், ஆனால் எந்த அமைப்பாக இருந்தாலும் பொதுச் சொத்தை சேதபடுத்துவது தன் வீட்டை தானே அழிப்பதற்கு சமம்  ஆகும். இதற்கு  பொ. மல்லாபுரம் சம்பவம்  மட்டும் எடுத்துக்காட்டு அல்ல' இதற்கு முன் நடந்த எத்தனையோ சம்பவங்களை அடையாளப்படுத்தளாம்.  நம் வருங்கால சமுதாயத்திற்கு அம்பேத்கர், காந்தி, நேரு, பெரியார், அண்ணா, காமராஜர், அவர்கள் காட்டும் வழியில் சமுதாயத்திற்கு வழி காட்டுதலே நம் தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே திமுக வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூட்டணி தர்மத்திற்கு துரோகம் செய்துவிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர் உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரூராட்சித் தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 250க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
 

Comments