தர்மபுரி மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச திவ்யதர்ஷினி

 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றி அளிக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் ஆகிய நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையினை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல் இ டி டி, ஜிட்டல் திரை மூலம் இன்று நேரலையில் காட்சிப்படுத்தப்பட்டது மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் மாணவிகளோடு நேரலையில் பார்வையிட்டார்.
 திட்டத்தை முக்கிய நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்கள் படிப்பில் அறிவியல் சிந்தனையில் ஆற்றலில் திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும் எனவும் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும் அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம் என்று காட்டப்படும் தமிழில் தனித்திறன் பெற சிறப்பு பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும் சரளமாக பேசுவதற்கும் நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடிங் ரோபோடிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களை கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் இவற்றைத் தவிர மனநல மருத்துவர்கள் உடல்நலம் மருத்துவர்களைக் கொண்டு விதமான உணவு வகைகளை உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவது உடற்பயிற்சி நடை உடை நாகரீகம் மக்களோடு பழகுதல் ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் தமிழ் பண்பாடு மரபு குறித்து மாணவ  மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் இப்பயிற்சிகள் அனைத்தும் தலைசிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நேரடி பயிற்சி இணையவழி பயிற்சி அவரவர் கல்லூரியில் பயிற்சி மாவட்ட ரீதியாக பயிற்சி என தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
 ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும், இதற்கென தனியே கலைதிட்டம், மற்றும் பாட திட்டம், உருவாக்கப்படும் ( 9 முதல் 12ம் ) வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும், முன்னாள் மாணவர்களை கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நெறிப்படுத்தும் மெண்டரிங் முறையும் அறிமுகப்படுத்தப்படும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள்  ( ஃபாரின் லாங்குவேஜ் )  கற்பிக்கப்படுவது.
இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும், எனவும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இண்டஸ்ட்ரி 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும் மாணவ மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ப நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும் எனவும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு கள் பிற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும் இத்திட்டத்தின் அனைத்து விபரங்களும் அடங்கிய வலைதள பலகை உருவாக்கப்படும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை புதிய திட்டமான நான் முதல்வன் திட்டத்தை ஒருங்கிணைக்கும் மேலும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும் என இத்திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது,  வாழ்க்கையிலும் வெற்றி அளிக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் ஆகிய நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை 'தருமபுரி மாவட்டத்தில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள்',  '75 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என'  மொத்தம் 182 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் எல்இடி டிஜிட்டல் திரை புரஜக்டர் தொலைக்காட்சிகள் கணினிகள் போன்ற சாதனங்களின் மூலம் இன்றைய தினம் 01 03 2022 நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்இடி திரை அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை நேரடி ஒளிபரப்பு பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் மாணவிகளோடு நேரலையாக பார்வையிட்டார் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பேசும்போது தெரிவித்துள்ளதாவது இளம் தலைமுறைகள் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற  பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான சிறப்பான திட்டத்தை இன்றையதினம் தொடங்கி வைத்து உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் இன்றைய இளம் தலைமுறைகள் ஆகிய நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக தலைவர்களாக பொறுப்புமிக்க பல்வேறு உயர் பதவிகளை வகிக்கக்கூடிய திறனையும் உயர்ந்த பண்பினையும் அறிவாற்றலையும் இளம் வயதிலேயே உருவாக்கிக்கொள்ள வேண்டும் அதற்கு உங்கள் தன்னம்பிக்கையும் லட்சியமும் உயர்ந்த இடத்தை அடைய பாதையாக இப்போதிருந்தே இருந்திட வேண்டும் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது அவை அனைத்தையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த கல்வியை கற்க வேண்டும் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இலட்சியமாகக் கொண்டு உங்கள் கல்வி அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் இளம் வயது திருமணம் என்பது அறவே இருக்கக்கூடாது உங்களின் சிந்தனைகள் செயல்பாடுகள் அனைத்தும் கல்வியிலும் உயர்ந்த லட்சியத்தை அடைவது மட்டுமே இருந்திட வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச திவ்யதர்ஷினி  இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு கணேஷ் மூர்த்தி பாலக்கோடு வட்டாட்சியர் திரு பாலமுருகன் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்..

Comments