தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல் - பிரதம மந்திரி ஆவாஸ் போஜனா திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் கம்பிகள் பெற்று கொள்ளலாம்
தர்மபுரி மாவட்டத்தில் 2021- 2022 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி அலகிற்கு இரும்பு கம்பிகள் உள்ளூர் இலக்கு நிர்ணயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணய குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உள்ளூர் விலையின் அடிப்படையில் மூன்று மாதத்திற்கு இரும்பு கம்பிகளை கொள்முதல் செய்ய ஒரு மெட்ரிக் டன் அளவிற்கு 8mm கம்பிகள் ரூ 64 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 10mm மேல் கம்பிகள் ரூ 64 ஆயிரம் என குழு உறுப்பினர்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் 2021 - 2022 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் போஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் மூவாயிரத்து இருநூறு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
இதில் இதுவரை கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் போக மீதம் உள்ள வீடுகளுக்கு இரும்பு கம்பிகள் தேவைப்படும் பயனாளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சிகள் ) நேரில் தொடர்பு கொண்டு இரும்பு கம்பிகளை பெற்றுக் கொள்ளலாம், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment