தருமபுரி
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனத்தில் மதுபானங்கள்,
விற்கப்பட்டு வந்த நிலையில் இதை தாண்டி கூடுதலாக தூக்கமாத்திரையின் மூலம்
தயாரிக்கப்படும் போதை பொருள், மற்றும் கஞ்சா, குட்கா, இதுபோன்ற அபாயகரமான
போதைப்பொருட்கள் தர்மபுரி மாவட்ட இளைஞர்களின் வாழக்கையில் நுழைந்து
சீரழித்து வருகிறது. இந்த மண்ணில் பெரும்பாலானோர் அதிகமாக விவசாயிகள்
மற்றும் ஏழைகளின் பிள்ளைகள்தான் உள்ளனர். ஒன்றும் வசதியான மக்கள் இங்கு
வாழ்வதில்லை, பெரும்பாலான மக்கள் தர்மபுரியில் இருந்து
வெளியூர்
பகுதிகளுக்கு சென்று கட்டடம் கட்டுதல், கரும்பு வெட்டுதல்
, திருப்பூர்
பனியன் தொழில்,
குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் தினந்தோறும் கிடைக்கும்
300 ரரூபாய்- வேலைகளுக்கு சென்றுதான் தனது பிள்ளைகளை எப்படியாவது நல்ல
நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று பெற்றவர்கள் தங்களது உடல் உழைப்புகளை
அற்பணிக்கிறார்கள். இப்படிப்பட்ட மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த
இளைஞர்களை குறிவைத்து அவர்களிடம் பணத்தாசையை உண்டாக்கி கஞ்சா குட்கா போன்ற
போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின்பு அவர்களின் மூலம் பல்வேறு
இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வருகின்றது கண்ணுக்கு தெரியாத மாஃபியா
கும்பல், இந்த மாஃபியா கும்பல் தர்மபுரி, அரூர் . பாப்பிரெட்டிப்பட்டி ,
பாலக்கோடு பகுதியில் உருவெடுத்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு
கூட அரூர் அருகே டி.எஸ். பி பெனார்ஸிப் பாத்திமா அவர்கள் ரோந்து பணியில்
ஈடுபட்டபோது கேரளாவில் இருந்து வந்த மூன்று இளைஞர்கள் சாக்குமூட்டையில்
வைத்திருந்த கஞ்சாவோடு பிடிபட்டனர். சமீபத்தில் கூட தர்மபுரி நூலஹள்ளி
அருகே கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்ததும் அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர்
ரங்கசாமி, காவல்துறையினர் மற்றும், சி.ஐ. டி , ரகசியமாக விசாரணை நடத்திய
பிறகு நூலஹள்ளி அடுத்த வட்டாளிகொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்
பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மாறி (75)
என்ற முதியவர் கைதுசெய்யப்பட்டார்.
அதே தினத்தில் குரும்பட்டி கிராமத்தில்
முதியவர் விஜயராகவன் (63) தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும்
காவல்துறையினர் இவரை கைது செய்து அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை
பறிமுதல் செய்தனர்.
ஆனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் இல்லையா ? அல்லது அங்கே இருக்கும் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா ? என்ற கேள்வியுடன் ஒரு சில காவல்துறையினரிடம் புலம்பல்கள் அவ்வபோது எழுந்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கேட்டபோது, தற்போது பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் லதா அவர்கள் கல்லூரி மாணவர்களிடையேவும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள முக்கிய நபர்களிடையேவும் மறைமுகமாக தொடர்பில் இருந்து யாராவது கஞ்சா குட்கா மற்றும் கள்ளத்தனத்தில் மதுபாட்டில்கள் வைத்து வியாபாரம் செய்கிறார்களா என்று விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்கெட்ச் போட ஆரம்பித்துவிட்டாராம் இன்ஸ் லதா அவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவுசெய்தனர். அதுமட்டுமல்லாமல் லோக்கலில் உள்ள பெண்களிடம் தொலைபேசி என்னை கொடுத்து அருகில் யாரவது போதை பொருள் விற்பனை செய்தால் தகவல் சொல்ல சொல்லியிருக்கிறாராம். இதை அறிந்த போதை பொருள் வியாபாரிகள் நடுக்கத்துடன் தயங்கி நிற்கிறார்களாம். இதுபோன்ற செயல்பாடுகளை இன்ஸ் லதா அவர்களிடம் விசாரித்தபோது இன்று மாணவர்களிடையே போதைப்பொருள் எளிதாக பரவிவருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் நட்பு உறவுகள் மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களாக கூட இருக்கலாம். நமது மாவட்டத்தில் படிக்கும் ஏழை மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது எதிர்காலத்தில் பெரிய எதிர்விளைவுகளை உருவாக்கும். ஆந்திராவில் ஒரு வாரத்திற்கு முன்பு 200 கோடி மதிப்புள்ள 2 லட்சம் டன் கஞ்சாவை கைப்பற்றி ஆந்திரா காவல்துறையினர் தீ வைத்தனர். அதன் அடிப்படியில் ஆந்திராவில் இருந்து நமது பகுதிக்கு கஞ்சாக்கள் கைமாற்றப்பட்டுள்ளதா என மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம் சமூகத்தையும், மாணவர்களையும் கெடுக்கும் வகையில் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலெண்டாக முடித்துவிட்டார். பாப்பிரெட்டிப்பட்டி "இன்ஸ் லதா" அவர்கள். ¶சைலண்டாக போதை பொருள் கும்பளை பிடிப்பாரா¶ !!! நாமும் இருப்போம் சைலெண்டாக..,,, |
Comments
Post a Comment