எங்களுக்கு ஆதரவு தாருங்கள் மோடியிடம் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல் - இந்தியா நிலைப்பாடு: ரஷ்யா வரவேற்பு
கடந்த மூன்று நாட்களாக ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதன்காரணமாக உக்ரைன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார். இதனையடுத்து இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக புடின் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறித்தும், ரஷ்யாவின் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் அத்துமீறி உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது குறித்தும் தெரிவித்தார். மேலும் இவ்விசயத்தில் அரசியல் ரீதியாக இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஐ.நா.,சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Comments
Post a Comment