குடியரசு தின விழா; விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! விருதுகளை அள்ளிச்சென்ற மாவட்டங்கள்
குடியரசு தின விழா; விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதோடு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும் பதக்கங்களையும் வழ்ங்கினார்.தமிழக அரசின் சார்பில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் சமூக ஆர்வலருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் பதக்கம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Comments
Post a Comment