முந்துவதில் போட்டி! உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!!




 முந்துவதில் போட்டி! உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!!

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வழியாக 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது இதனால் யார் முன் செல்வது என்ற அதிவேகத்தில் முந்துவதில் கனரக வாகனங்கள் இடையே போட்டிகள் நிலவுகின்றன இதனால் அநேக இரு சக்கர வாகன ஓட்டிகளும் நடைபாதர்களும் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் எதிரில் இரண்டு கனரக வாகனங்கள் நடுவில் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டது அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார் அந்த பகுதியில் மூன்று தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது  இதனால் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . எனவேஉடனடியாக நெடுஞ்சாலை துறை அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தருவதோடு விதிகளை மீறும் வாகனங்களும் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Comments