செல்போனை திருடிச்சென்ற இளையான்குடி காவல் துறை !! மணல் திருடர்களை காப்பாற்ற நடந்த மாஸ்டர் பிளான் !!! சிவங்கங்கை மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ் பி ?????

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாகநாதபுரம் கிராமத்தில் வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடியவர்களை  கிராம மக்கள் தடுத்து நிறுத்தம். சம்பவ இடம் வந்த இளையான்குடி காவல் ஆய்வாளர் கிராம மக்களை அடித்து விரட்டியதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மணல் கொள்ளையர்களை தடுக்கும்போது வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை காவல் துறை பரித்துசென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கபட்ட இளைஞரை கேட்கும் போது அவர்கள் பரிக்கவில்லை திருடிசென்றுள்ளனர். என குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த சம்வம் குறித்து 
இளையான்குடி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனர். இதன் முழுமையான சம்பவத்தை பற்றியும், மணல் எடுக்கும் அனுமதி பற்றியும் காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் அவர்களிடம் கேட்கும்போது அரசு அனுமதியுடன் அல்லுபவர்களை தடுத்துள்ளனர். அரசு பணிக்காக மணல் அள்ளியுள்ளனர். என கூறினார். இதுபற்றி மாவட்ட வருவாய் ஆய்வாளரின் கருத்தை கேட்ட போது மணல் அள்ளுவதற்கு அவர்கள் எந்த உரிமையும் பெற வில்லை என்று கூறினார். அப்படியென்றால் மணல் அள்ளும் கொள்ளையர்களுக்கும் இந்த இலையான்குடி காவல் ஆய்வாளருக்கும் நல்ல நெருக்கமான உறவு இருப்பதாக தெரியவருகிறது. இந்த குற்றசம்பவங்களை மாவட்ட கண்காணிப்பாளர் விசாரித்தால் சிறப்பு என பாதிக்கபட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments