உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆக.30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!
சென்னை: உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.30ல் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. நான் முதல்வன் திட்டத்திற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும் துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல், ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment