1956ல் காந்தி சீடர்களால் துவக்கப்பட்ட இந்நிறுவனம் 1976ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அரசு நிதி உதவி பெறும் பல்கலையாக உயர்ந்தது. மத்திய பல்கலையாக 2 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.துணைவேந்தரை தலைவராக கொண்டுள்ள இப்பல்கலை மூத்த பேராசிரியர் 1 மூத்த புல முதல்வர்கள் 2 மூத்த இணை பேராசிரியர் 1 மத்திய உயர் கல்வி அமைச்சகம் சார்ந்த 4 பேர் வேந்தர் நியமிக்கும் 3 பேர் என 12 பேரை ஆட்சி மன்ற குழுவாக கொண்டுள்ளது.
பெங்களூரு சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஆய்வு மைய இயக்குனராக பணியாற்றிய மாதேஸ்வரன் 2021 ஆகஸ்டில் புதிய துணைவேந்தரானார். அடுத்த 3 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்ய மூத்த பேராசிரியர் டி.டி.ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தரானார். புதிய துணைவேந்தர் தேர்வுக்காக பீஹார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் தலைமையில் 3 பேர் கொ

விதிமீறல்
பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:சமீபகாலமாக பல்கலையின் பதிவாளர் நியமனம் டில்லி மையம் அமைத்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என மத்திய தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவிக்க பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் டில்லி மையமும் மூடப்பட்டது. தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்காமல் ரங்கநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்கலை மானிய குழு விதியை சார்ந்தே காந்திகிராம பல்கலை நெறிமுறைகள் உள்ளது.
இதன்படி பொறுப்பு துணைவேந்தராக இதே பல்கலையை சேர்ந்த மூத்த பேராசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விதி மீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.இது போன்ற விதிமீறல்கள் தொடரும் பட்சத்தில் பல்கலை வளர்ச்சி தடைபட்டு திருவாரூர் புதுச்சேரி போன்ற மத்திய பல்கலைகளின் மையமாக இப்பல்கலை மாற்றப்படும் அபாயம் உருவாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
ண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment