அதிமுக கட்சி காணாமல் போகும் !! சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி - சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும்

 சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து பேசி உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனியில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ்.யிடம் வலியுறுத்தி இருந்தனர். மீண்டும் மீள்வதற்கான தலைமை அதிமுகவில் தற்போது இல்லை. சசிகலா அல்லது தினகரன் தலைமை ஏற்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். தற்போதுள்ள தலைமையால் எதுவும் செய்ய முடியாது.

அதாவது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எதுவும் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 பேர் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. சட்டப்பேரவை தேர்தலிலாவது கொங்கு மண்டலத்தில் வென்றது; இப்போது அதிமுகவுக்கு அதுவும் இல்லை. அதிமுகவின் தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Comments